இந்தியா, மே 3 -- தேமுதிக உயர்மட்டக் குழு பொறுப்பில் இருந்து தன்னைவிடுவிக்குமாறு அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திற்கு கடிதம் அளித்துள்ளார். விடுவிக்காத பட்சத்தில் கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன் எனவும் நல்லதம்பி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் அவர் கட்சியை விட்டு விலகியதாக தகவல்கள் பரவிய நிலையில், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தான் கட்சியில் இறுதி மூச்சு உள்ள வரை இருப்பேன் என்று கூறியுள்ளார். கட்சியின் உயர்மட்டக் குழு பொறுப்பில் இருந்து தான் என்னை விடுவிக்கக் கோரினேன். விடுவிக்காத பட்சத்தில் நான் ஒதுங்கிக் கொள்கிறேன் என்று தான் கூறினேன். சில பத்திரிகையாளர்கள் நான் கட்சியிலிருந்து விலகுவதாக செய்தி வெளியிட்டுள்ளனர். நான் ஒருநாளும் இந்தக்...