இந்தியா, ஏப்ரல் 3 -- தமிழ் காலண்டர் 03.04.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், வியாழக்கிழமையான இன்று பொதுவாக குரு பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் திருச்செந்தூர் முருகனை குருவாக நினைத்து வீட்டில் இருந்தபடியே வழிபாடை மேற்கொண்டால் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார தடைகள் நீங்க, சுப நிகழ்ச்சிகள் கைகூட, தொழிலில் அதிக லாபம் பெற இன்றைய தினம் முருகன் வழிபாடு செய்வது சிறப்பு. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளான இன்று (ஏப்ரல் 03) பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு தெரிந்துகொள்வோம்.

தமிழ் ஆண்டு : குரோதி வருடம்

தமிழ் மாதம் : பங்குனி 20

தேதி: 03.04.2025

கிழமை - வியாழக்கிழமை...