இந்தியா, ஏப்ரல் 5 -- Mahalakshmi Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த இடமாற்றத்தின் பொழுது ஒரு கிரகம் மற்ற கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் இதனால் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். இந்த யோகங்களின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று கிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் கடக ராசியில் நுழைந்தார். வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதியான நாளை சந்திர பகவான் கடக ராசிக்கு செல்கின்றார். இந்நிலையில் கடக ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரன் இவர்கள் இருவரும் இணைகின்றனர்.

கடக ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரன் இந்த இரண்டு கிரகங்கள் இணைகின்ற காரணத்தினால் மகாலட்ச...