இந்தியா, ஜூன் 8 -- இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் முக்கிய விரதங்களில் ஒன்று தான் வட சாவித்திரி விரதம். ஒவ்வொரு ஆண்டும் திருமணமான பெண்கள் இதை கடைபிடிக்கிறார்கள். பஞ்சாங்கத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் கோடைகால பெளர்ணமி அமாவாசை திதியில் வட சாவித்திரி வழிபாட்டு விரதம் அனுஷ்டிக்கப்படும். வடம் என்றால் விழுது என்று பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில் தான் இருக்கிறது. அதுப்போல ஒரு பெண்ணின் பலம் அவளின் கணவனை பொருத்துதான் இருக்கிறது. நல்ல கணவன் அமையவும், மாங்கல்ய பலம் பெருகவும் கன்னிப்பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆலமர விழுதுகளில் பூஜை செய்து அனுஷ்டிக்கும் தினமாகும்.

இந்த ஆண்டில், அதாவது 2025 ஆம் ஆண்டில், வட சாவித்ரி விரதம் ஜூன் 10 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு தொடங்கி ஜூன் 11 ஆம் தேதி மதியம் 1:13 மணி வரை விரதம் கடைபிடிக்கலாம். இருப்பினும், உதய் ...