இந்தியா, ஏப்ரல் 20 -- நடிகை சமந்தா தற்போது 'சுபம்' என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். இந்தப் படம் அடுத்த மாதம் மே 9 ஆம் தேதி ரிலீஸிற்கு தயாராக உள்ள நிலையில், இந்தப் படத்திற்கு ஆசிர்வாதம் பெற, நேற்று ஏப்ரல் 19 ஆம் தேதி திருப்பதி பாலாஜி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். இந்த செய்தி தான் அவர் குறித்த கிசுகிசுக்களுக்கு அடித்தளமிட்டுள்ளது.

மேலும் படிக்க| 'சில பாடல்கள் அருவருப்பாக உள்ளது.. இது விஷத்தை ஆக்ஸிஜனோடு சுவாசிப்பது போன்றது'- உணர்ச்சிவசப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான்

நடிகை சமந்தா நேற்று திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலுக்குச் சென்றார். பளிச்சிடும் இளஞ்சிவப்பு நிற சல்வாரில் சமந்தா அழகாகக் காட்சியளித்தார். இவருடன் இயக்குநர் ராஜ் கோயிலுக்கு வந்திருந்தார். அவர்களுடன் பாதுகாப்புப் பணியாளர்களும் இருந்தனர். மற்றொரு வீடியோ...