இந்தியா, மே 26 -- நேற்று முளைத்த காளான்களுக்கு பதில் சொல்ல தயாரில்லை என தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து உள்ளார்.

மேலும் படிக்க:- 'பாஜகவிடம் நெடுஞ்சாண்கிடையாகத் தி.மு.க. சரணாகதி அடைந்துவிட்டது' மு.க.ஸ்டாலினை சாடும் விஜய்!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திமுக முதல்வர் பயமற்றவர் என்றும், ஆதரிப்பதையும் எதிர்ப்பதையும் வெளிப்படையாகச் செய்யும் தலைவர் என்றும் கூறினார். திமுக, மத்திய அரசு கொண்டுவந்த சட்டங்களை எதிர்த்து ஆட்சியைத் துறந்த வரலாறு கொண்டது என்றும், நெருக்கடி நிலையின்போது மிசா சட்டத்தின் கீழ் கொடுஞ்சிறை அனுபவித்த போதும் பின்வாங்காமல் உறுதியாக நின்ற இயக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காதது குறித்து விளக்கமளித்த சேகர் பாபு, 2026-ல் பெருந்...