இந்தியா, மார்ச் 25 -- தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், துறை சார்ந்த புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் அதிமுக கட்சி அலுவலக திறப்பு விழாவையொட்டி அவர் பயணம் மேற்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அங்கு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்கவுள்ளதாக பேசப்படும் நிலையில், இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ...