இந்தியா, மே 28 -- கோடைகாலத்தில் வருகின்ற வெயில் ஆனது மிகவும் கடுமையாக இருக்கும். அதிலிருந்து தப்பிப்பதற்காக நாம் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இந்த காலகட்டத்தில் நாம் வழிபடும் தெய்வங்களுக்கு கோடைகாலத்தில் வெயில் தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக சிறப்பு பூஜைகள் நடைபெறுவது உண்டு. இதை ஏற்கனவே நமது முன்னோர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.

பொதுவாக அக்னி நட்சத்திரம் காலத்தில் சூரிய பகவான் பரணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் இருந்து ரோகினி நட்சத்திரத்தின் முதல் பாதத்தை கடப்பார். இந்த காலகட்டத்தில் வெயில் மிகவும் உக்கிர நிலையில் இருக்கும். சிவபெருமானை பொறுத்தவரை அவருக்கு வெப்பம் என்பது ஆகாது. எப்போதும் அவர் குளிர்ச்சியான நிலையில் இருப்பதை விரும்புவார் என கூறப்படுகிறது. இதற்கு ஒரு கதையும் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிங்க| 12 ஆண்டுகள் க...