இந்தியா, மே 17 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 2ஆவது நாளாக நடந்து வருகிறது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை.

டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனிடம் வீட்டில் கிழிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் சாட் நகல்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக இரவிலும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு உள்ளது.

மேலும் படிக்க:- அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு! லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!

டாஸ்மாக் அதிகாரியிடம் வாட்ஸ்அப்பில் பேசியவர் உதயநிதியின் நண்பரா என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், யார் அந்த ரதீஷ் என கேள்...