இந்தியா, மே 29 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

சென்னை மகளிர் நீதிமன்றம் ஞானசேகரனை குற்றவாளி என தீர்ப்பளித்தது. 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்ட நிலையில், வரும் ஜூன் 2-ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி ராஜலட்சுமி அறிவிப்பு.

பழனி, திருச்செங்கோடு, குன்றத்தூர், உடுமலைப்பேட்டை, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம், மாங்காடு, வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டதாக தமிழ்நாடு அரசு.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் வெளியான தீர்ப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு. திமுக அரசு மீது நிலவும் கேள்விகளுக்கு விடை இல்லை என்றும் விமர்சனம்.

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு 24 மணி நேரத்தில் ம...