இந்தியா, மே 22 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தங்க நகைக்கடன் அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளை கொணு வந்து சாமானியர்களின் தலையில் ரிசர்வ் வங்கி இடையை இறக்கி உள்ளது. நகையின் மதிப்பில் முன்பை விட 5 சதவீதம் குறைத்து 75 சதவீதம்தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய நடைமுறை மக்களை நேரடியாக பாதிக்கும் என்பதால் இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து.

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட புனித தோமையர் மலை, சூலூர் பேட்டை, சாமல்படி, சிதம்பரம், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, போளூர்,விருத்...