இந்தியா, மே 4 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் மாணாக்கர்கள் உட்பட இந்தியா முழுவதும் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. மே 28 வரை நீடிக்கும் இந்தக் காலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவும் என எதிர்பார்ப்பு.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர் உள்ளிட்ட 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டியது. வேலூரில் அதிகபட்சமாக 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை உறுதி அளித்து உள்ளது.

5.முதல்வர் ஸ்டாலின் உறுதிதமிழகத்தின் உரிமைகளை எந்தக் ...