இந்தியா, மே 12 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

மதுரை வைகை ஆற்றில் தங்ககுதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம். தண்ணீரை பீய்ச்சியடித்துக் கொண்டாட்டம்.

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் பிரஷர் பம்ப் பயன்படுத்த பக்தர்களுக்கு நீதிமன்றம் த்டை விதித்த நிலையில், பலர் தடையை மீறி பிரஷர் பம்ப் பயன்படுத்தியதால் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். தோல் பைகளில் சுத்தமான நீரை பயன்படுத்தி நேர்த்திக் கடன் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

மதுரை சித்திரைத் திருவிழாவின்போது வைகை ஆற்றில் இருந்த பூமிநாதன் என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. சித்திரைத் திருவிழாவில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அ...