இந்தியா, மே 31 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

வெள்ளப்பெருக்கு குறைந்த போதிலும் மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை நீடிக்கிறது.

தமிழ்நாடு அரசு பணிகளில் இருந்து ஒரே நாளில் இன்று 8,144 பேர் ஓய்வு பெறுகின்றனர். இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கை ஆகும். அரசு பள்ளி ஆசிரியர்கள் இந்த கல்வி ஆண்டின் இறுதியில் ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை அதிகரிப்பு.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் ஜூன் 3, 2025 அன்று சென்னையில் 120 மின்சார பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைக்க உள்ளார். ஆண்டு இறுதிக்குள் சென்னையில் மொத்தம் 625 மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி, நகரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்கு...