இந்தியா, மே 5 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு. 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னல் உடன் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிப்பு.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளிலேயே காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி.

நீட் விவகாரத்தில் திமுகவின் பொய்யால் மாணவ, மாணவிகளின் உயிர் பறிபோவதாக ஈபிஎஸ் குற்றச்சாட்டு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனசாட்சி உறுத்தவில்லையா என 'எக்ஸ்' வலைத்தள இடுகையில் கேள்வி.

மேலும் படிக்க:- 'பாஜக கூட்டணியிலிருந்து பழனிசாமி என்ன சாதித்தார் என பட்டியல் போடுவாரா?' ஆர்.எஸ்.பாரதி கேள்வி

வண்டலூர்-மீஞ்சூர் சாலை ...