இந்தியா, ஜூன் 27 -- தமிழ்நாட்டின் இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

கோவை மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி கிராமம், சமூக வலைதளங்களில் வைரலான ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் சுற்றுலாத் தலமாக கவனம் பெற்ற போதிலும், அங்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால், நீர்நிலைகளில் குளிக்க வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர...