இந்தியா, மே 15 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

நீலகிரி மாவட்டம் உதகையில் 127ஆவது மலர் கணகாட்சியை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். தாவரவியல் பூங்காவில் கண்காட்சியை தொடங்கி வைத்து மலர் அலங்காரங்களை பார்வையிடுகிறார். கண்காட்சியையொட்டி 35,000 மலர் தொட்டிகளில் பல்வேறு மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

உதகை மலர் கண்காடியையொட்டி நீலகிரி மாவட்டத்தில் இன்று அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பு. இதனை ஈடுசெய்யும் விதமாக மே 31ஆம் தேதி பணிநாளாக இருக்கும் என ஆட்சியர் அறிவிப்பு.

சென்னை செண்ட்ரல் - சூலூர்பேட்டை இடையே 21 மின்சார ரயில்கள் ரத்து. பொன்னேரி-கவரைப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடப்பதால் மின்சார ரயில்கள் ரத்து. சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி செல்லு...