இந்தியா, ஜூன் 6 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

கோயம்புத்தூர் மற்றும் நெல்லையில் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஜமாஅத் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல், திருமங்கலத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இயக்குநர் அமீர் இந்தத் தொழுகையில் பங்கேற்றார்.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது; இதுவரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

3.மருத்துவப் படிப்பு விண்ணப்பங்கள்

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண்கள் என்டிஏ இணையதளத்தில் இருந்து நேரடியாகப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...