இந்தியா, ஏப்ரல் 5 -- தர்ப்பூசணி உங்களுக்கு புத்துணர்ச்சி தரும் பழம் மட்டும் கிடையாது. அது சுவையான கோடைக்கால பழமாகும். இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. நீங்கள் ஏன் கோடைக்காலத்தில் தர்பூசணியை சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். அதை தெரிந்துகொண்டால் ஏற்கனவே தினமும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் தர்ப்பூசணியின் அளவு அதிகரிக்கத்தான் செய்யும். தர்ப்பூசணியின் நன்மைகளுக்காக அதை சாப்பிட்டு இந்த கோடையின் தாகத்தை தணித்துக்கொள்ளுங்கள்.

தர்ப்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. அதுதான் இந்த பழத்தை நீர்ச்சத்துக்கள் நிறைந்த பழமாக்குகிறது. தினமும் தர்ப்பூசணி சாப்பிடுவது உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுத்து, உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைக்கிறது. குறிப்பாக கடுங்கோடையின் வெப்ப காலங்களில் நீர்ச்சத்தை அதிகம் கொடுக்கிறது.

தர்பூசண...