இந்தியா, மார்ச் 19 -- Rahu Sani: ஜோதிட சாஸ்திரத்தின் படி நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். நிழல் கிரகமாக விளங்கக் கூடியவர் ராகு பகவான். இவர்கள் இருவரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் மீன ராசியில் இணைந்து பயணம் செய்ய உள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அழிவு யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் மூலத்திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனிபகவான் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று குரு பகவான் என் சொந்தமான ராசியான மீன ராசியில் நுழைகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்கின்றது.

மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசியில் ராகு மற்ற...