இந்தியா, மே 20 -- தயிர், கோடைக்காலத்தில் உங்கள் உடலை குளுகுளுப்பாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அடிக்கும் வெயிலுக்கு அறுசுவை தேவைப்படவில்லை. தயிர் அல்லது வெறும் மோர் கூட போதுமானதுதான். தயிர் உங்கள் குடலில் உள்ள பாக்டீரியாக்களை பாதுகாக்கிறது. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தில் இருந்து உங்கள் உடலை காக்கிறது. இந்த தயிரை வைத்து நீங்கள் எண்ணற்ற பானங்களை தயாரிக்க முடியும். இதை நீங்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் செய்து பருகலாம். நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள ஏற்றதுதான். கோடைக்காலத்துக்கு இதமளிக்கும் தயிரை வைத்து என்னென்ன பானங்கள் தயாரிக்க முடியும் என்று பாருங்கள்.

தயிரை வைத்து தயாரிக்கக்கூடிய பானங்களில் முதலாவது மோர்தான். தயிரைவிட மிகவும் சிறந்தது. தயிரை கடைந்து அதில் உள்ள வெண்ணெயை...