இந்தியா, ஏப்ரல் 7 -- திருச்சி தில்லை நகரில் அமைச்சர் கே.என்.நேரு வசிக்கும் வீட்டிலும் கேரளா மற்றும் மதுரையில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் நடத்தும் டிவிஎச் குரூப் என்கிற கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத் துறை தற்போது சோதனை நடத்தி வருகிறது. அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி நகர் ஆகிய இடங்களில் உள்ள டிவிஎச் குரூப் நிறுவனங்களில் ரெய்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

இதே போல், நேருவின் மகனும் எம்.பி.,யுமான அருண் நேருவுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆழ்வார்பேட்டையில் உள்ள அருணுக்கு சொந்தமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு குழுக்களாக 10க்கும் மே...