இந்தியா, ஜூன் 2 -- மதயானைக் கூட்டம், இராவணக் கோட்டம் போன்ற படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை நடிகர் சாந்தனு தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்,
அந்தப் பதிவில், என் அன்பான அண்ணன் விக்ரம் சுகுமாரனின் ஆன்மா சாந்தி அடையட்டும். நான் அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். நீங்கள், உங்களுடன் இருந்த அனைத்து தருணங்களையும் உயிர்ப்புடன் வைத்திருந்தீர்கள். உங்களை நாங்கள் அனைவரும் மிஸ் செய்வோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவரது இறப்பு குறித்து சினிமா வட்டாரங்களில் விசாரிக்கையில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது. இவரது மறைவு செய்தி கேட்டு அவருக்கு நெருக்கமான சினிமா...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.