இந்தியா, மே 22 -- மே 22, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை அதிர வைத்த திகில் படமான டிமாண்டி காலனி, பாலசந்தர் இயக்கிய பாசிடிவ் வைப் படமான வானமே எல்லை போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க திகில் த்ரில்லர் படமாக உருவாகி 2015இல் ரிலீசான படம் டிமாண்டி காலனி. தமிழ் சினிமாவில் பேய் படங்கள் ட்ரெண்டிங்காக இருந்த சமயத்தில் வெளியான இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில், மற்ற பேய் படங்கள் போல் இல்லாமல் வித்தியாசமான கதையுடன் ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் படிக்க: ஓடிடி பிரியர்களே.. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட திகில் படங்கள் லிஸ்ட...