இந்தியா, மே 29 -- மே 29, 2025க்கு முன், சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி, விஷால் நடித்த தோரணை, எம்ஜிஆர் நடித்த ரிக்சாகாரன், விசு இயக்கத்தில் பிரபு நடித்த காவலன் அவன் கோவலன் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரணிதா, பிரேம்ஜி அமரன், சமுத்திரகனி, பார்த்திபன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து ஆக்சன் திகில் படமாக உருவாகி 2015இல் ரிலீசான படம் மாசு என்கிற மாசிலாமணி.

மாஸ் என்ற டைட்டிலுடன் மிக பெரிய எதிர்பார்ப்புடன் உருவான இந்த படம் ரிலீசுக்கு முன் மாசு என்கிற மாசிலமணி என்ற டைட்டில் மாற்றப்பட்டு ரிலீசானது. தமிழ் சினிமா பேய் சினிமாக்கள் வெளியான காலகட்டத்தில், சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து திகில் படமாக வெளியாகி படமும் ரசிகர்களை கவர்ந்தது....