இந்தியா, பிப்ரவரி 23 -- தமிழ் காலண்டர் 23.02.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று பொதுவாக சூரிய பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சூரிய வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். முறையாக அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தின் போது சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நம் உடலும், மனமும் தெளிவு பெறும் என்பது ஐதீகம். அதேபோல், சிவபெருமானை மனதில் நினைத்து வழிபாடுவதால் துன்பங்கள் நீங்கி, தைரியம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் பூஜைக்கு உரிய நல்ல நேரம் , எமகண்டம் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

இன்றைய சூரிய உதயமானது காலை 6:32 மணிக்கு நடைபெறுகிறது.

(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய...