இந்தியா, பிப்ரவரி 22 -- தமிழ் காலண்டர் 22.02.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், சனிக்கிழமையான இன்று சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாளாகும். இந்த நாளில் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவது நற்பலன்களை தரும்.

மேலும், சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய அருமையான நாளாகவும் கருதப்படுகிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு உகந்தநாளாகவும் பார்க்கப்படுகிறது. இந்நாளில் பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பெருமாளைச் சனிக்கிழமை அன்று ஆராதனை செய்து வழிபாடு செய்தால், சனி பகவான் கொடுக்கும் சங்கடத்தில் இருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காத்தருள்வார் என்பது ஐதீகம்....