இந்தியா, மே 26 -- தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

மேலும் படிக்க:- 'பாஜகவிடம் நெடுஞ்சாண்கிடையாகத் தி.மு.க. சரணாகதி அடைந்துவிட்டது' மு.க.ஸ்டாலினை சாடும் விஜய்!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழையும் பதிவாகியுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிடத்தில் அதி கனமழையும் பதிவாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் ம...