இந்தியா, ஏப்ரல் 30 -- தமிழ்நாடு மின்னணு உற்பத்தியில் முன்னோடி மாநிலமாக வளர்ச்சி பெற்று உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு மின்னணு உற்பத்தித் துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக வளர்ந்து வருவதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமையுடன் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநில அரசின் முன்நோக்கு திட்டமிடல் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தலைமையில் தமிழ்நாடு மின்னணு உற்பத்தியில் உலகளாவிய மையமாக மாறி வருவதாக குறிப்பிட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மின்னணு உற்பத்தி 1.66 பில்லியன் டாலரில் இருந்து 14.6 பில்லியன் டாலராக உயர்ந்து, 130% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியாவின் மொத்த மின்னணு உற்பத்தியில் 41.23% தமிழ்நாட்டின் பங்களிப்பாக உள்ளது. இந்த சாதனையை ...