இந்தியா, மார்ச் 14 -- ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. 2023 ஆம் ஆண்டில் நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தென்னரசுவின் இரண்டாவது பட்ஜெட் தாக்கல் இதுவாகும். 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசின் 4வது பட்ஜெட் இதுவாகும். நாளைய தினம் வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 17-ம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு பட்ஜெட்டை வாசித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், மகளிருக்கு வாக்குரிமை வழங்கிய சென்னை மாகாணத்தின் வழியில் அவர்களுக்கு சொத்துரிமை வழங்கியது தமிழ்நாடு. இந்தியாவுக்கே முன்னோடியா...