இந்தியா, மே 17 -- தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நான்கு நிதித்துறை சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். மார்ச் 14 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 18 மசோதாக்களில் இந்த நான்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க:- அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு! லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!

தமிழக சட்டமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் 14 முதல் ஏப்ரல் 30 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், பட்ஜெட் மீதான விவாதம், துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மற்றும் 18 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டன. இவற்றில், நிதித்துறை தொடர்பான நான்கு மசோதாக்கள் ஆளுநர் ஆர்.என்.ரவிய...