இந்தியா, மார்ச் 5 -- தமன்னா பிரேக் அப்: சினிமா துறையில் மற்றொரு ஜோடி திருமணம் வரை செல்லாமல் தற்போது பிரிந்துள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. அதாவது நடிகை தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா ஜோடி காதலித்து வந்த நிலையில், அவர்கள் பிரேக் அப் செய்ததாக மணி கண்ட்ரோல் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த இவர்கள் இருவரும் பிரிந்துள்ளதாக அவர்களது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த ரிப்போர்ட் கூறுகிறது.

நடிகர்களான தமன்னா, விஜய் வர்மா காதல் கதை சில ஆண்டுகளாக சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் சில காலம் ரகசியமாக டேட்டிங் செய்த பின்னர், அவர்கள் காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். அவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என்று செய்திகளும் வெளியாகின. ஆனால் எதிர்பாராத வி...