இந்தியா, ஜூன் 13 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் இந்த ஜூன் மாதம் 7ஆம் தேதியன்று செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கு சென்றார். இந்நிலையில் செவ்வாய் பகவான் சென்ற சிம்ம ராசி சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும்.

செவ்வாய் பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை க...