இந்தியா, மே 18 -- புதுக்கோட்டை மாவட்டம் உதயசூரியபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயது நர்சிங் மாணவி, தனக்குத்தானே பிரசவம் பார்த்து பிறந்த பெண் குழந்தையை வீட்டு வாசலில் உயிரோடு புதைத்த சம்பவத்தில், அவரது காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க:- 'டாஸ்மாக் நிறுவனத்தில் ஒரு லட்சம் கோடி முறைகேடு நடந்து உள்ளது' புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அதிர்ச்சி தகவல்!

இலுப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு நர்சிங் படித்து வந்த மாணவி , கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். திருமணமாகாத நிலையில், தனது காதலன் சிலம்பரசனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் கர்ப்பமடைந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்த அவர், தந்தை வெளிநாட்டில் இருக்கும் சூழலில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்...