இந்தியா, மார்ச் 29 -- ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025 தொடர் ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 30ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது. பல்வேறு எடைப்பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபிரிவினருக்கு இந்த போட்டிகள் நடைபெற்றுள்ளன.

இதையடுத்து நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற போட்டியில், இந்திய மல்யுத்த வீராங்கனைகளான மனிஷா பன்வாலா 62 கிலோ எடைப்பிரிவில் தங்க பதக்கம் வென்றார். இதேபோல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஆன்டிம் பங்கல் 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார். இதன் மூலம் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025 தொடரில் இந்தியாவுக்கு பெண்கள் பிரிவில் இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க: காமன்வெல்த் பதக்கம் வெற்றியாளர்.. பேட்மிண்டன் விளையாட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பு

இந்திய வீராங்கனை ...