இந்தியா, மே 18 -- லஸ்ஸி என்பது பஞ்சாபில் பரிமாறப்படும் ஒரு பாரம்பரிய பானம் ஆகும். இது கெட்டியான தயிரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது சூப்பர் சுவையானதாக இருப்பதுடன், உங்கள் உடலை குளுகுளுப்பாகவும் வைத்திருக்க உதவும். உங்கள் உடலுக்கு புத்துணர்வும் கொடுக்கிறது. வெறும் தயிரை மட்டும் வைத்து லஸ்ஸி தயாரிக்காமல் நீங்கள் அதில் ட்ரை ஃப்ரூட்ஸ்களையும் சேர்த்து தயாரிக்கவேண்டும். அப்போது இன்னும் சுவையானதாக இருக்கும். அதுபோன்ற சூப்பர் சுவையான லஸ்ஸியை தயாரிப்பது எப்படி என்று பாருங்கள்.

* தயிர் - 2 கப்

* பால் - அரை கப் (காய்ச்சி ஆறவைத்து, ஃபிரிட்ஜில் வைத்து குளிர்விக்கப்பட்ட பால்)

* சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்

* ட்ரை ஃப்ரூட்ஸ் - 2 ஸ்பூன்

* (முந்திரி, பாதாம், பிஸ்தாக்களை துருவி எடுத்துக்கொள்ளவேண்டும்)

* ஏலக்காய்ப் பொடி - கால் ஸ்பூன்

* ஐஸ் கட்டிகள் ...