இந்தியா, மே 14 -- சசிகுமார்- சிம்ரன் கூட்டணியில் இலங்கை வாழ் தமிழர்கள் குறித்த திரைப்படமாக வெளியானது டூரிஸ்ட் ஃபேமிலி. கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிநடை போட்டு வருகிறது.

தன் முதல் படத்திலேயே வெற்றியை நிலைநாட்டி விட்டதாக டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டி தள்ளினர்.

இந்த சமயத்தில் தான் அபிஷன் ஜீவிந்த் நடிகர் தனுஷிடம் ஒன் லைன் ஸ்டோரி கூறியதாகவும் அது தனுஷிற்கு மிகவும் பிடித்து போனதாகவும் தெரிகிறது.

இந்தக் கதையை கேட்ட தனுஷ் தனக்கு கதை பிடித்துள்ளது எனக் கூறியதுடன் கதையை டெவலப் ஆக்கும் வேலையை செய்யுமாறு கூறியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரவிக்கின்றன.

தனுஷ் ஏற்கனவே, குபேரா படத்திலும், இட்லி கடை படத்தை இயக்கி நடித்தும்...