இந்தியா, மே 21 -- தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளுக்கு ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் குடிமையியல் பணிகள் மற்றும் தொழில்நுட்ப பணிகள் ஆகியவை அடங்கும். அடுத்த ஆண்டு தேர்தல் வரும் காரணத்தினால் இந்த ஆண்டிற்குள் பல அரசுத் தேர்வுகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வரிசையில் கடந்த மாதத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்று 615 காலிப்பணியிடங்கள் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு) தேர்வு அட்டவணையை இன்று (21/05/2025) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.இந்த விண்ணப்பங்கள் அடுத்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி வரை பெறப்படும்.

மேலும் படிக்க | 'நீட் தேர்வு அச்சத்தால் சேலம் மாணவர் உயிரிழப்பு....