இந்தியா, மே 22 -- டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ஊழல் தொடர்பான வழக்கை சிபியைக்கு மாற்றக் கோரும் மனுவின் வழக்கு முடியும் வரை டாஸ்மாக் தொடர்பான எந்த முதல் தகவல் அறிக்கைகளையும் மூட மாட்டோம் என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை உறுதி அளிக்குமா என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் ஊழல் வழக்கு விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட 40-க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.வெங்கடாசலபதி, தனது வழக்கறிஞர் வி.ஆர். சண்முகநாதன் மூலம் பொது நல வழக்கை தாக்கல் செய்தார். 2017 முதல் 2024 வரை பதிவு செய்யப்பட்ட 41 எஃப்.ஐ.ஆர்.கள், மதுபானங்களின் அதிக விலை நிர்ணயம், டெண்டர் செயல்முற...