இந்தியா, மே 22 -- டாஸ்மாக் ஆயிரம் கோடி முறைக்கேட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை மட்டுமே விதித்து உள்ளது, நிரந்தர தடை விதிக்கவில்லை என பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா தெரிவித்து உள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை (ED) மீது உச்சநீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை குறித்து பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா, இது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றும், நிரந்தர தடையல்ல என்றும் தெரிவித்து உள்ளார். அமலாக்கத்துறை தனது வாதங்களை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்து இந்தத் தடையை நீக்கும் என அவர் நம்பிக்கை வெளிப்படுத்தினார். திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், டாஸ்மாக் முறைகேடு குறித்து திமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் ஊழியர் சங்கமே பகிரங்கமாக பேசியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க:- துணை வேந்தர்களை நியமிக்கும்...