இந்தியா, மே 17 -- சென்னையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பான 1000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில், மேலாண் இயக்குனர் விசாகனை அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டாவது நாளாக சென்னை உள்ளிட்ட 12 இடங்களில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க:- அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு! லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!

டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனைகளைத் தொடங்கினர். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள விசாகனின் வீட்டில் நேற்று காலை முதல் சோதனைகள் தொடங்கிய நிலையில், அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை ...