இந்தியா, மே 16 -- கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் தலைமையகம் மற்றும் டாக்மாக் அதிகாரிகளின் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் டாஸ்மாக்கில் 1000 கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதாக கூறி அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இது தமிழ்நாட்டில் பெரும்பரப்பை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் படிக்க | சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு! முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு தலைவலி!

அதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகன், அதிகாரிகள் ராமதுரைமுருகன் மற்றும் சங்கீதா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதனையடுத்து அந்த அதிகாரிகள் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர். இருப்பினும் இந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள...