சென்னை,கரூர், ஏப்ரல் 3 -- அமலாக்கத் துறை சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி கே.ராஜசேகர், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் சகோதரர் என்பதால், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும், மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் முறையிட்டுள்ளார். தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வு முன், இந்த முறையீடு செய்யப்பட்டது.

அதை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், 'இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் தலைமையிலான இருவர் கொண்ட அமர்வில் நடந்து வருகிறது. எனவே அவர்களிடம் போய் முறையிடுமாறு கூ...