சென்னை, மார்ச் 17 -- டாஸ்மாக் முற்றுகை போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டனர். பலரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, பாஜக இன்று மார்ச் 17ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். இந்நிலையில் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் வீட்டின் முன், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, பாஜக முக்கியத் தலைவரான தமிழிசை அவர்களது சாலிகிராமம் இல்லம் முன் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க:|'திமுக உடன் கைக்கோர்க்க தயார்' தேமுதிக பொதுச்செய...