இந்தியா, ஏப்ரல் 8 -- டாஸ்மாக் அலுவலகங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை மேற்கொண்டு விசாரிக்கத் தடைகேட்ட விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தொடர்ந்த வழக்கை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது.

தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்புத்தெரிவித்துள்ளது. மேலும் தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக, இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் முடிவு செய்யட்டும் என்றும், அதன் முடிவு அடிப்படையில் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவ...