இந்தியா, ஏப்ரல் 1 -- டாஸ்மாக் வழக்கில் இன்று மீண்டும் விசாரணை, 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு, வணிக கேஸ் சிலிண்டர் விலை குறைவு உள்ளிட்ட முக்கிய செய்திகளை டாப் 10 நியூஸ் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. 40 சுங்கச் சாவடிகளில் 5 முதல் 50 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர். வானகரம், செ...