இந்தியா, மார்ச் 24 -- தமிழ்நாட்டின் இன்றைய நாளுக்கான டாப் 10 முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

மதுரை ஈச்சனேரியில் தனிப்படை காவலர் மலையரசன் கொலையில் ஆட்டோ ஓட்டுநர் மூவேந்திரன் என்பவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

18 வயதை எட்டியோரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்டவைகள் தொடர்பாக தமிழ்நாட்டில் பதிவு பெற்ற மாநில மற்றும் தேசியக் கட்சிகள் உடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொள்கிறார்.

சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை பற்றி பேசிக் கொண்டு இருக்கின்றனர். சென்னையில் ரவுடி சரித்தர பதிவேட்டில் இருந்தவர்தான் அமைச்சர் சேகர்பாபு, இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால், நாடு விளங்குமா...