இந்தியா, மே 8 -- சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவரும், ஐசி-814 ஏர் இந்தியா விமானக் கடத்தலின் மூளையாகச் செயல்பட்டவருமான அப்துல் ரவூப் அசார், இந்திய ஆயுதப் படைகள் நடத்திய'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரவூப் அசார், தனது சகோதரரும் மற்றொரு பயங்கரவாதியுமான மசூத் அசாரால் நிறுவப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதியாக இருந்தார். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்தியாவால் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவராக அவர் இருந்தார்.

குறிப்பாக 2007 ஆம் ஆண்டு அவரது சகோதரர் தலைமறைவான பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நடவடிக்கைகளில் அவர் குறிப்பிடத்தக்க நபராக இருந்தார்.

மேலும் படிக்க | பஞ்சாப் அனைத்து போலீசாரின் விடுப்புகளும் ரத்து.. மருத்துவ ஊழியர்களுக்கு அழைப்பு!

199...