இந்தியா, மே 18 -- ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா சினிமா திரையரங்க உரிமையாளர்கள் (தியேட்டர் ஓனர்ஸ்) அதிரடி முடிவு எடுத்துள்ளனர். ஜூன் 1-ம் தேதி முதல் தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளனர். ஹைதராபாத்தில் இன்று (மே 18) இரண்டு தெலுங்கு மாநில திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ஜூன் 1 முதல் காலவரையின்றி தியேட்டர்களை மூடுவதாக அறிவித்தனர். தயாரிப்பாளர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க| ரவி மோகன்- ஆர்த்தி விவகாரத்திலும் தனுஷை உள்ளே இழுத்த சுச்சி! ஆதாரம் இருப்பதாக பேசியதால் பரபரப்பு!

சினிமாக்களை வாடகை முறையில் இனி திரையிட முடியாது என்றும், பர்சன்டேஜ் அடிப்படையில் கொடுத்தால் மட்டுமே சாத்தியம் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டத்தில் பிரபல தயாரிப்பாளர்கள் தில் ராஜு, சுரேஷ் பாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்...