இந்தியா, மே 25 -- பிரான்ஸின் இவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் மே 25 அன்று நடந்த ஜாப்ரா மகளிர் ஓபன் கோல்ஃப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை சாரா கோஸ்கோவா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

செக் குடியரசு வீராங்கனை சாரா கோஸ்கோவா தனது நெருங்கிய போட்டியாளரான ஷானன் டானை இரண்டு ஷாட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் பட்டத்தை வென்றார்.

கோஸ்கோவா 67 ஸ்கோர் எடுத்து ஷானனை விட 2 ஸ்கோர் கூடுதலாக எடுத்தார்.

சாரா தொழில்முறை கோல்ஃப் வீராங்கனை மற்றும் பெண்கள் ஐரோப்பிய சுற்றுப்பயண வீராங்கனை ஆவார்.

இந்திய வீராங்கனைகள் ஹிதாஷி பக்ஷி மற்றும் திவேசா மாலிக் (34), தீக்ஷா தாகர் (39) ஆகியோர் சமநிலையில் உள்ளனர். ஜாப்ரா மகளிர் ஓபன் போட்டியில் இந்தியாவின் அவனி பிரசாந்த் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியா சார்பில் பங்கேற்ற வீராங்கனைகளில் இவர் ஜொலித்தா...